Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Friday, March 30, 2007

சடாயு - ம,ம - லாஸ்ட் பார்ட்டு

பூங்காவில் அவருடைய பதிவுகளை தேர்ந்தெடுக்க சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை என்னும் "வீரமான" முடிவை சடாயு எடுக்க நினைக்கிறாராம். அதற்கு காவி கூட்டணிகள் "என்ன ரோஷம், என்ன ரோஷம்" என்று ஆரவாரம் செய்கிறது. சிரிப்புதான் வருகிறது. தமிழ்மணத்தின் முகப்பில் வரும் பப்ளிசிட்டி வேண்டும், பின்னூட்ட திரட்டலில் தமிழ்மணம் மூலம் பப்ளிசிட்டி வேண்டும், ஏதோ போனால் போகிறதென்று பூங்காவில் பதிவகளை போட அனுமதிக்க மாட்டாராம்.
நஷ்டம் சிறிதுமின்றி ரோஷப்பட (அல்லது அது போல் நடிக்க) இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.


நான் இந்த பிரச்சனையைப் பற்றி பதிவிட காரணம்:
தமிழ்மணத்தில் உட்கார்ந்து கொண்டு அதனை மிக அருவருப்பாக திட்டுவது எனக்கு என்னவோ வீட்டுக்குள் எச்சில் துப்புவது போன்று அசிங்கமான செயலாக தோன்றியதால் எழுந்த எதிர்வினை.

தமிழ்மணம் ஏதேனும் தவறு செய்திருந்து இவர்கள் கோபப்பட்டால் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் இவர்களின் அரசியல் கொள்கைக்கு மாறான எதிர்கருத்து சொன்னவுடனே "தேசத்துரோகி" என்று தமிழ்மணத்தை முத்திரை குத்த தயாராகும் இவர்களின் குதர்க்க சிந்தனை கேவலமானது.

என் கருத்தை சொல்லிவிட்டேன்.
விலகுவதும் விலகாததும் அவர்(களி)ன் வெட்கம்/மானம் தொடர்புடைய செயல்.


முற்றும்

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home