Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Tuesday, February 27, 2007

சமஸ்கிருதத்தால் தமிழும் தமிழர்களும் பெற்றவை

(மொழி அரசியல் பற்றிய விவாதம்)

சமஸ்கிருதமும் தமிழும் மிகப் பழமையான மொழிகள்
வெறுமனே கண்மூடித்தனமாக "தமிழ் (மட்டும்) வாழ்க" என்பதிலோ குருட்டுத்தனமாக "சமஸ்கிருதம் ஒழிக" என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை.

1932 வரை மருத்துவக்கல்லூரியில் சேர வேண்டுமானால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி (Rule).
இது எதற்கு? யார் இதனால் பயன் பெறுவார்கள்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். தினம் தினம் தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி தன் மகனுக்கு சமஸ்கிருதம் சொல்லித்தர முடியுமா? அதே போல் ஒரு செருப்பு தைக்கும் ஆள், தன் மகளுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தர முடியுமா? ஆனால் சமஸ்கிருத அர்ச்சகர் தன் பிள்ளைகளுக்கு எளிதாக சொல்லித் தரமுடியும். அர்ச்சகர்கள் அனைவரும் பிராமணர்கள். இப்பொழுது புரிந்ததா? இதுவும் Reservation, But in reverse.

அக்காலத்தில் எத்தனை எத்தனை தமிழர்களுக்கு இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும்?
நினைத்தாலே வயிறு குளு குளு என்று இருக்கிறது...
இன்று நான் சுயமாக சம்பாதிப்பது எனது கல்வியறிவினால் தான். இந்தக் கல்வியறிவும், வேலையும், பொருளாதார வாய்ப்புகளும் எனக்கு ஜாதி/சமஸ்கிருதம் காரணம் காட்டி எனக்கு மறுக்கப்பட்டிருந்தால்?????

குருட்டுத்தனமாக "சமஸ்கிருதம் ஒழிக" என்று எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படியெல்லாம் நாம் ஒடுக்கப்பட்டோம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு பிறகு எதிர்க்க வேண்டும். நான் சொல்வது சரியா?

குறிப்பு:
யாரேனும் "மருத்துவக் கல்லூரிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்" என்னும் சட்டம் யாருடைய முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது?
யாருடைய முயற்சியால் நீக்கப்பட்டது? என்பதை தேதிவாரியாக(Timeline) அறிந்துகொள்ள தொடுப்பு (Link) தர முடியுமா?

Labels: ,

8 Comments:

  • சாத்தியப்பட்டால் தகவல்களைத் திரட்டித் தருகிறேன். வேறு இருசெய்திகள். இங்கு மருத்துவக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது முதலில் அதில் சேர பார்ப்பனர்கள் முன்வரவில்லை. ஏனெனில் உடலை அறுப்பது தீட்டு.

    அய்.சி.எஸ் தேர்வுகள் லண்டனிலேயே நடைபெற்றுவந்தன. அதை இந்தியாவில் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது காங்கிரசு. ஆனால் அதை தலித் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் கடுமையாக எதிர்த்தார். ஏனெனில் கடல்கடந்து போவது தீட்டு என்பதால் பார்ப்பனர்கள் லண்டன் சென்று தேர்வு எழுதவில்லை. இங்கு இந்தியாவில் அய்.சி.எஸ் தேர்வுகள் நடத்தப்பட்டால் காலங்காலமாய்க் கல்வி கற்க வாய்ப்புள்ள பார்ப்பன மாணவர்களோடு போட்டியிட்டுத் தலித் மாணவர்கள் தோற்றுவிடக்கூடும் என்பதாலேயே சீனிவாசன் அதை எதிர்த்தார்.

    By Blogger மிதக்கும்வெளி, at 9:28 AM, February 27, 2007  

  • வருக "மிதக்கும் வெளி"

    கொடுத்த தகவல்களுக்கு நன்றி.

    By Blogger Kans, at 2:26 AM, February 28, 2007  

  • நானே அதனை பதிவாக போட இருக்கிறேன் கன்ஸ்.

    வாழ்த்துக்கள்.


    அன்புடன்,
    விடாது கருப்பு.

    By Anonymous Anonymous, at 2:36 AM, February 28, 2007  

  • கன்ஸ் நானறிய மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இந்த விதி இல்லை. ஆயுர்வேத கல்லூரிகளில் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஏதாவது சான்றாதாரம் - reference கொடுக்க முடியுமா? நன்றி.

    By Blogger அரவிந்தன் நீலகண்டன், at 4:43 AM, February 28, 2007  

  • //நானே அதனை பதிவாக போட இருக்கிறேன் கன்ஸ்.

    வாழ்த்துக்கள்.


    அன்புடன்,
    விடாது கருப்பு. //

    வருக விடாது கருப்பு,
    கண்டிப்பாக எழுதவும்.

    By Blogger Kans, at 9:47 AM, February 28, 2007  

  • //அரவிந்தன் நீலகண்டன் said...
    கன்ஸ் நானறிய மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இந்த விதி இல்லை. ஆயுர்வேத கல்லூரிகளில் இருந்திருக்க வாய்ப்புண்டு.//

    வருக அரவிந்தன் நீலகண்டன்,

    எப்படிங்க உங்களால் மட்டும் இப்படி சப்பைக் கட்டு காரணங்கள் எடுத்து விட முடிகிறது?

    சமஸ்கிருதம் படித்தால் ஆயுர்வேதம் எளிதாகப் புரியுமென்றால் சமஸ்கிருதத்தை பாடமொழியாக வைக்க வேண்டும். அதை விடுத்து சமஸ்கிருதம் அறிந்தவர்களை எடுப்பதும் அல்லது முன்னுரிமை குடுப்பதும் என்ன நியாயம்?

    "Engineering Drawing" என்பது "Language of Engineers" என்று சொல்வார்கள். அதற்காக "Engineering Drawing" படித்தவர்கள்தான் Engineer Course ல் சேர முடியுமென்று Rule போட முடியுமா?
    "Engineering Drawing"ஐ பாடமாகத்தானே படிக்கிறோம்?

    By Blogger Kans, at 11:49 PM, February 28, 2007  

  • It was removed by the cheif minister of madras state during that time. That too the reason was somekind of 'suniyum at own expense' issue.

    During one of the function (IIRC it is convacation or some sort) at the university they were talking at sanskrit in the stage and making funny comments about the chief minister thinking that he was sanskrit illiterate. The issue was CM was a pandit in sanskrit.

    Then the CM replied all their questions and gave a speech in sanskrit. Then the first thing he did was remove the 'sanskrit requirement' for Medical scools.

    That is why I mentioned this as 'Suniyam at own expense !'

    Yet another Anony!!!

    By Anonymous Anonymous, at 12:55 AM, April 22, 2007  

  • Yet another Anony

    இந்தக் கண்றாவியெல்லாம் நடந்திருக்கிறதா?

    By Blogger Kans, at 12:59 AM, April 23, 2007  

Post a Comment

<< Home