Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Saturday, February 24, 2007

யாரோ எழுதுறாங்கப்பா

// ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை. //

"ஆத்திக கோஷ்டியால் நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது"
நன்மை கிடையாது என்பது தெரிந்த விஷயம். ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

தீமை கிடையாதா? அடப் பாவிகளா...
1) ஜாதி என்னும் அமைப்பை ஏற்படுத்தி நாட்டின் 80% மக்களை அடிமைகளாக நடத்தியது
2) "உயர் ஜாதிக்குத்தான் படிப்பு" என்று பொதுஜனத்தை படிப்பறிவற்ற அடிமைகளாக மாற்றியது
3) "பறையர்" என்னும் வீர மரபுடைய சமூகத்தை தீண்டத்தகாதவர்களாக்கியது
(போருக்கு புறப்படும் முன் "பறை" என்னும் மத்தள வகை வாத்தியம் வாசிப்பவர்கள்)
4) "Pariah - பறையா - Social Outcast, Person rejected from society " என்னும் Definition ஏற்பட்டது
5) ஆங்கிலேயன் இந்தியாவில் இருக்கும் வரை "நாங்களும் ஆங்கிலேயன் போல் வெள்ளைத்தோல் ஆரியர்" என்று அவனோடு கும்மியடித்துவிட்டு, சுதந்திரம் கிடைத்தப் பின் "ஆரியர் கோட்பாடு" (Aryan Theory) இடைஞ்சலாக இருப்பதால் அப்படி ஒன்று நிகழவில்லை என்று கதை விடுவது.

இதெல்லாம் தீமையில்லையா?

அக்காலத்தில் இது போல் ஆயிரம் நடந்திருக்கு.
படிப்பறிவும், Scientific Exposure ரும் இருக்கும் இக்காலத்திலேயே "ராமகோபாலன்" போன்ற "தீமை செய்யாத" ஆத்திக கோஷ்டிகள்
நாட்டின் முன்னேற்ற திட்டங்களில் ஒன்றான் "சேது சமுத்திர திட்டத்தை" லூசுத்தனமாக எதிர்ப்பது தீமையாகத் தெரியவில்லையா?


// ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை. //

"முழு பூசனி inside சாப்பாடு" ரேஞ்சுக்கு இதையெல்லாம் யாரோ எழுதறாங்கப்பா.
நீங்களும் நம்புங்கப்பா...

Labels: , ,

1 Comments:

Post a Comment

<< Home